பொங்கல்

ஆண்டு முழுதும் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் அனைத்தையும்விட உயர்வானதாகச் சொல்லப்படுவது, பொங்கல் பண்டிகை

திருநாளின் ஆரம்பம் எது தெரியுமா?எப்படி துவங்கியது ?யார் துவக்கியது ?

பொங்கல் (ஈழத்து வழக்கு: புக்கை)

கோவர்த்தன கிரிதாங்கி நின்று கோபர்களை இந்திரனின் கோபமான மழையில் இருந்து காத்தான் கோபாலன். தேவராஜனை அன்று வரை வழிபட்ட அனைவரையும், பகலவனைப் பணியச் சொன்னான் பரந்தாமன். இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதற்கு முன் ராம அவதாரத்திலேயே சூரிய வழிபாட்டைத் தொடங்கிவிட்டான் மாயோன்.

ராம, ராவண யுத்தத்தின்போது,ஸ்ரீ ராமச்சந்திரனுக்குத் தளர்ச்சியும் சோர்வும் ஏற்படாமல் இருக்க, கதிரோனை வழிபடச் சொன்னார் அகத்திய மாமுனி. ஆதித்ய ஹ்ருதயம் எனும் அற்புத மந்திரமும் உபதேசித்தார். அப்படியே செய்து ராவணனை வென்றார் ராமபிரான்.

கிருஷ்ண அவதாரத்தில் இன்னொரு சமயத்திலும் சூரிய வழிபாடு சூழ்வினை போக்கும் என சுட்டிக்காட்டியிருக்கிறான் கோவிந்தன். தன் ப்ரியத்துக்கு உரிய நாரதரை, தன் மகன் சாம்பன் (ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்) கேலி செய்ததால் கோபம் கொண்டு, பெருநோய் பீடிக்க சாபமிட்டான் சக்ரதாரி. சாபவிமோசனமாக, நதிக்கரையில் பொங்கல் இடும்போது அந்த அடுப்பின் புகைபட்டு நோய் நீங்கும் என்றார்.

. மார்கழியின் கடைசி நாளே இந்த விரதத்தின் கடைசி நாள்.

காவிரிபூம்பட்டிணத்தில் இருபத்து எட்டு நாட்கள் ‘மணிமேகலை ” எனும் பெயரில் இந்த விழா கொண்டாடப்பட்டதாக மணிமேகலை இலக்கியத்தில் விழாவறை காதையில் கூறப்பட்டுள்ளது

பழந்தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் ‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ‘ என்னும் தமிழர் மரபில் சிறப்புற்றிருந்த சூரிய வழிபாடு குறித்தும் சூரியக் கடவுளை ‘உச்சிக்கிழான்‘ என்று ஏத்திக் கூறியுள்ளது.

தென்திசையில் பயணிக்கும் பகலவன், வடதிசைக்கு மாறும் தைமாத முதல் நாளை உத்தராயன புண்யகாலம் என்கின்றன வேதங்கள். அந்தநாளில் சூரியனை வழிபடுவது, சூழ்வினைகளை சுட்டெரித்து வாழ்வினை வளமும் நலமும் நிறைந்ததாக ஆக்கும் என்பது ஐதிகம்..

 

 

 பொங்கல் வாழ்த்து:

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக!
பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்து பகைதணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!
நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!
வாழிய நலனே! வாழிய நிலனே!–(ஐங்குறுநூறு)

இந்த பாடலில் பொங்கல் என்று வரவில்லை என்றாலும், பொங்கல் அடையாளங்கள் அனைத்தும் விளங்கி வாழ்த்துக் கூறுவதைக் காண்கிறோம்

கங்கைகொண்ட  இராஜேந்திரசோழனின் காளத்திக் கல்வெட்டில் மகர சங்க்ரமணப் பெரும் பொங்கல் என்ற குறிப்பு உள்ளது எனச் சரித்திரச்செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார்

முதல் நாள் போகிப் பண்டிகை:

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது.போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.

மேலும் தகவல்களுக்கு   போகிப் பண்டிகை/காப்புக்கட்டு சொடுக்கவும்

இரண்டாம் நாள் தைப்பொங்கல்:

சங்கரணம் என்றால் நகர்தல் என்று பொருள். சூரியன் ஆடிமாதம் முதல் மார்கழி மாதம் வரை செய்யும் தனது தென்முகமான பயணத்தை வடதிசை நோக்கி மாற்றும் தை மாதத்தின் முதல் நாளில்தான் உத்தராயன புண்ய காலம் தொடங்குகிறது. தை மாதம் மகர ராசிக்குரியது. எனவே, இந்த நாளை மகர சங்கராந்தி என்று குறிப்பிடுகின்றனர்

தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.

புதிய மஞ்சள் கொத்தையும்  கரும்பையும்  அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சங்க இலக்கியத்தில் தைப்பொங்கல்:

தைஇத் திங்கள் தண்கயம் படியும்நற்றிணை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” — குறுந்தொகை

தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” — குறுந்தொகை

தைஇத் திங்கள் தண்கயம் போல”– ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” –கலித்தொகை

மேலும் தகவல்களுக்கு தைப்பொங்கல் சொடுக்கவும்

 

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்/பட்டிப் பொங்கல் :

அன்று மாடுகள் கட்டும் கட்டுத்தரை சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் இயற்கை வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில்  சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு,கழுத்துக்கட்டி அணிவித்தும் தயார் செய்வார்கள்.

இதன் பின் பசு, காளை, எருமை,ஆடு,நாய்,பூனை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம்,கரும்பு கொடுப்பார்கள்.

‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

நான்காம் நாள் காணும் பொங்கல் / பூப் பொங்கல் :

காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்

பிறந்தவளே இதை ஆரம்பிக்கவேண்டும் ,அப்பொழுது கண்ணுப்பிடி வைத்தேன், காக்காபிடி வைத்தேன், கூடப்பிறந்த பிறப்பெல்லாம் நன்றாக இருக்க வேண்டும், வயிற்றில் பிறந்த பிறப்பு வளமுடன் வாழ வேண்டும் என்று அந்த சூரிய நாராயணனைப் பிரார்த்திக்க வேண்டும்

கணுப்பிடி:

உடன்பிறந்த சகோதரர்களுக்காக பிறந்தவளே செய்யும் நோன்பு. உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.

‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என்று பழமொழியாகச் சொல்வதுண்டு.

 

கும்பகோணம் சூரியனார் கோவில்:

கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோவில்தான் இந்தியாவில் சூரியனுக்காக கட்டப்பட்டு இன்றும் பழுதுபடாத நிலையிலுள்ள கோவில் ஆகும். திருவாவடுதுறை மடம் கீழ் உள்ள இக்கோவிலில் வழிபாடும் திருவிழாக்களும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றன.

தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.சூரியனார் கோவிலை கி.பி. 1110-ம் ஆண்டு முதலாம் குலோத்துங்க சோழன் கட்டினான்.

கருப்பட்டி பொங்கல்:

தேவையான பொருட்கள் :

கருப்பட்டி தூள் – 1 கப்
பச்சரிசி – 1 கப்
பால் – 3 கப்
தண்ணீர் – 3 கப்
நெய் – அரை கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
முந்திரி – தேவைக்கு
உலர் திராட்சை – தேவைக்கு

அரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர், இரண்டு கப் பால், அரிசி சேர்த்து நன்றாக வேக விடவும்.

மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி தூளுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து தணலை சிம்மில் வைத்து நன்றாக கரைய விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் வேகும் அரிசியை அடிக்கடி கிளறி விடவும்.

பாலும் தண்ணீரும் வற்றியவுடன் காய்ச்சி வடிகட்டிய கருப்பட்டி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும்.

மீதம் உள்ள ஒரு கப் பாலையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவும்.

அதில் அடிக்கடி நெய்யை பாதி பாதியாக சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும்.

அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

எல்லாம் நன்றாக சேர்ந்து பொங்கல் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்து அதனுடன் துருவிய பாதாம், பிஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்.

சுவையான கருப்பட்டி பொங்கல் தயார்.

 

நன்மைகள் நாளும் சூழ்ந்திருக்க சூரியனை வேண்டுங்கள்!

மனம் இனிக்கப் பொங்கல், மனை சிறக்க மஞ்சள், நலம் சிறக்க கரும்பு, நாளும் கோளும் நன்மைகள் செய்ய நல்வாழ்த்துக்கள் என எல்லாமே இனிமையாய் அமைந்த பொங்கல் திருநாளில் இல்லாதவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் அது நீங்காது தங்கும்

 

 

 

போகிப் பண்டிகை/காப்புக்கட்டு நோம்பி

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் .போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.முன்னோர்களுக்கான பூஜை காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது.போகியன்று, கொங்கு பகுதிகளில் வீட்டின் கூரையில் செருகப்படும் ஆவாரம் பூ, பூலாப்பூ,வேப்பிலை இதை காப்புக்கட்டு என்பார்கள்.

காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ,பூலாப்பூ(பூளைப்பூ) வைத்து  ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

 

Image result for பூளைப்பூ
பூளைப்பூ

பூளை அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை கொங்கு வட்டர வழக்கில் பூளாப்பூ என்பர்

வேளாண் பூதம் அணியும் பூக்களில் ஒன்று பூளை பூ

போகத்தை==விளைச்சலை தந்தவன் ,போகி என்றால் இருவரை குறிக்கும்.

  • நாஞ்சில் வலவன்/வாலியோன்/பலராமன்/நாஞ்சிற்பனைக் கொடியோன்
  • இந்திரன்

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.வைகறையில்(காலைநேரம்) ’நிலைப் பொங்கல்’ நிகழ்வுறும்.

வாலியோன்:

மாயோனும்,வாலியோனும் அன்றைய ம் விவசாய குடிகளின் இரட்டை தெய்வங்கள்

Krishna & Balarama

பலராமனை நம்மில் பெரும்பாலானோர் மகாபாரதத்தின் மூலமே அறிவோம். ஆனால் தமிழ் இலக்கியங்களை படித்தால் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் பலராமன் தொல்காப்பியத்தில் வணங்கபட்ட “வேளாண்மைக்கடவுள்” என்பதே. தமிழர் பண்டிகை எனப்படும் பொங்கலின் துவக்கத்தில் கொண்டாடப்படும் “போகியின்” தெய்வம் அவனே.

Balarama

மதுபானபிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. மதுபானபிரியனான பலராமனை வணங்கி மதுவை படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடபடுவதை காணலாம்.

தமிழகத்தில் உலக்கை தாடியனுக்கு சங்ககாலத்தில் கோவில்கள் பல இருந்தன என்பர் சிலம்பு வாயிலாக அறிகிறோம்.பின்வரும் சிலம்பு பாடல் அதை தெளிவாக விளக்குகிறது.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”(சிலப்பதிகாரம்)

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும், 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

பலராமன் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டாலும் அவனது தமிழ்ப்பெயர் வாலியோன் என்பதே. வாலியோன் என்றால் வெண்ணிறமுள்ளவன் எனப்பொருள். தம்பியான மாயோன் கருநிறத்தவன். அவனோடு ஒப்பிடுகையில் வாலியோன் சற்று வெண்மை நிறத்தவன். மாயோனும், வாலியோனும் அன்றைய விவசாயக் குடிகளின் இரட்டை தெய்வங்கள். இதை நற்றிணை கூறுவது

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி –(நற்றிணை 32)

மாயோன் – கண்ணன், அன்ன- போன்ற, மால்வரைகவாந் மலைப்பக்கம், வாலியோந் பலதேவன் அன்ன- ஒத்த, வயங்குவெள் அருவி- வெண்ணிறமுடைய அருவிஅதாவது கருமலையில் வீழ்கின்ற வெள்ளருவியை பார்த்து “இம்மலை கண்ணனின் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது. அதில் விழும் வெண்ணிற அருவி வாலியோனை ஒத்து இருக்கிறது” என இந்த நற்றிணைப்பாடல் கூறுகிறதுபலராமனின் நிறம் வெள்ளை. ஆயுதம் கலப்பை. ஆனால் அவனது கொடி வடநாட்டில் எங்கேயும் காணமுடியாத தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் பனைமரக்கொடி.

இதனால் சங்க இலக்கியங்கள் அவனை பனைக்கொடியோன் என அழைத்தன.நாஞ்சில் என்றால் கலப்பை. கலப்பையை ஏந்திய பலதேவனை “நாஞ்சில் வலவன்” எனக்குறிக்கும் வழக்கமும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

காண்க

 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன – பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு–(கார் நாற்பது-19)

நாஞ்சில் வலவன் – கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல – வெண்ணிறம் போல, பூஞ்சினை-பூங்கொம்பினையும், செங்கால் – செவ்விய தாளினையுமுடைய, மரா அம் – வெண்கடம்புகள், தகைந்தன – மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு – என் மனம், பைங்கோல் தொடி-பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி – விளங்குகின்ற, முன் கையாள் – முன்னங்கையை யுடையாளின், தோள் – தோள்கள், துணையாவேண்டி – எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது – நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று

 

Related image
நாஞ்சில்வலவன்- Balarama with Plough

 

புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப்
பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப்
பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக்
கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி
ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச்–(தளவாய்புரச் செப்பேடு)

மேல குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்  பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே,போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே!

இந்திரன்:

போகி என்றால் இந்திரனையும் குறிக்கும்.இந்திரனே மழைக்கு அதிபதி.ஐம்பூதங்களுக்கு நிகரான ஐம்பொறிகளின் (பஞ்சேந்திரியங்களின்) தெய்வம்; ஐம்பொறிகளால் நுகரப்படும் போகத்தின் தெய்வம்; போகத்தில் விளையும் படைப்பின் தெய்வம் – என்ற சித்திரம் இந்திரனுக்கே பொருந்தக் கூடியது.

இந்திரா வழிபாட்டின் வீழ்ச்சி:

மாயோன் – வாலியோன் (கண்ணன் – பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை – ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது.

“வேந்தன் மேய தீம்புனல் உலகம்”–(தொல்காப்பியம்)

போகி பலராமன் விழாவே இந்திரா விழா சித்திரை மாதம் நடந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறது

பூம்புகாரில் இந்திர விழாவின்போது

“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும்சொரிந்து”–(சிலப்பதிகாரம் )

இந்திரா விழா சமயத்தில் பொங்கல் வைத்த இந்திரனை வழிபட்டு இருக்கலாம் ஆனால் தை மாதம் வரும் பொங்கல் விழா பலராமன்/உலகை தடியனின் விழா தான்.

 

 

 

திருக்கார்த்திகை-கார்த்திகை தீபம்

 

கார்த்திகை விளக்கீடு !

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா.. அக்னி ஸ்வரூபமாக போற்றப்படும் சிவனுக்கும், சிவ அக்னியில் உதித்த ஆறுமுகனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் உகந்த மாதமாக கார்த்திகை மாதம்.பொதுவாக கார்த்திகை மாதத்தில் இரண்டு மடங்கு அதிகமாக தீபம் ஏற்றுவார்கள். ஒன்று, வருடத்தின் இந்த நேரத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், நம் தினசரி வேலைகளை செய்ய நமக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிச்சம் தேவைப்படும் என்பதால். மற்றொன்று நம் வாழ்வில் ஒளியை பெருக்கிக் கொள்ளும் நேரம் இது.கார்த்திகை என்பதற்கு `அழல்’, `எரி’, `ஆரல்’  போன்றவற்றைப் பொருளாகக் கொள்ளலாம்

அறிவியல் கரணம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்து கார்த்திகை தீபத்திருநாள் கொண்டபப்படுகிறது.மழைக்காலங்களில் வரும் தோற்று கிருமிகளை அன்றைக்கே களைந்து குழந்தைகள் பெரியோர்களை காக்கும் ஒரு நுட்பம்  இந்த தீபத்திருநாள் .காற்றில் உள்ள நுண்ணிய கிருமிகளை சொக்கப்பனை அல்லது மாவொளி  நெருப்பு பொறிகள்  அழிப்புது உண்மை.இந்த உண்மையை உணர்ந்த தமிழர்கள் இதை ஈராயிரம் ஆண்டுகளுக்காக கடைபிடிக்கிறாரகள்.

சூடாமணி நிகண்டு

சூடாமணி நிகண்டில் கார்த்திகை பற்றி விளக்கம்

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்:

  1. தெறுகால்
  2. தேள்
  3. விருச்சிகம்

கார்த்திகை நாளைக்குறிக்கும்சொற்கள்:

  1. அங்கி
  2. அளக்கர்
  3. அளகு
  4. அறுவாய்
  5. ஆரல்
  6. இறால்
  7. எரிநாள்
  8. நாவிதன்

அறுமுகனும் தீபத்திருநாளும்:

சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன்  கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள்.

கார்த்திகை தீபா திருநாள் மூன்று நாள் கோலாகலமாக நடக்கும் , ஊரே ஒளியால் மிளிரும். பெண்கள் குழந்தைகள் கும்மி வட்டமாக அடித்து பாடல்கள் படுவார்கள் வட்டமாக

  1. பெரிய கார்த்திகை
  2. நாட்டுக் கார்த்திகை
  3. கொல்லைக் கார்த்திகை

பெரிய கார்த்திகை:

மலைகளில் தீபம் ஏற்றுவது பெரிய கார்த்திகை   I.e திருவண்ணமலை , பழனி

நாட்டுக் கார்த்திகை:

நீர்நிலகைளில் , கோவில்களில் தீபம் ஏற்றுவது நாட்டு கார்த்திகை. இது பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுவது.இந்த நாட்டு கார்த்திகை நாளில் கொங்கர்கள் தலைமுறை தலைமுறையாக  தங்கள் குலதெய்வ கோவில்களில் விளக்கு ஏற்றுவார்கள் .

கொல்லைக் கார்த்திகை:

கழனிகளில்( வயல்வெளிகளில்) குப்பைமேட்டில் விளக்கு ஏற்றுவது கொல்லை கார்த்திகை இது தீபத்தின் மூன்றம் நாள்.இந்த மூன்றம் நாளில் மக்கள் சொக்கபானை கொளுத்துவார்கள்.

Image result for சொக்கப்பனை
சொக்கப்பனை
சொக்கப்பனை

படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் நடுவில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அவர்களின் அகந்தையை போக்குவதற்காக எம்பெருமான் ஈசன், திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளையே திருக்கார்த்திகை தீபத்திருநாளாக கொண்டாடிவருகிறோம்.

திருவண்ணாமலை தீப திருவிழா

                                       ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி

 

அருணாசலபுராணம் :

`திருவண்ணாமலைத் தலத்தில் தீப தரிசனம் செய்பவர்கள் முக்தியடைவர்’ என்று அருணாசல புராணம் கூறுகிறது.

`கார்த்திகைக்கு கார்த்திகை நாள் ஒரு ஜோதி

மலைநுனியிற் காட்ட நிற்போம்….

வாய்த்த அந்தச் சுடர் காணில் பசிபிணியில்

லாது உலகின் மன்னி வாழ்வார்
பார்த்ததிவர்க்கும் அருந்தவர்க்கும் கண்டோர்
தவிரும் அது பணிந்தோர் கண்டோர்
கோத்திரத்தில் இருபத்தோர் தலைமுறைக்கு
முத்திவரம் கொடுப்போம்’

தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானை ஜோதி வடிவில் காட்சி கொடுக்க வேண்ட, `கார்த்திகை மாதம், கார்த்திகை தினத்தன்று மலை உச்சியில், நான் ஜோதி மயமாக காட்சியளிப்பேன்’ என்றும், `இந்த ஜோதி தரிசனத்தைக் கண்டவர்களின் பசிப்பிணி விலகும், துன்பங்கள் பனிபோல் விலகும், தீப தரிசனத்தைக் கண்டவர்களின் குலத்திலுள்ள இருபத்தியோரு தலைமுறையினருக்கு நான் முக்தியை அளிப்பேன்’ என்று சிவபெருமான் திருவாய் மலர்ந்து அருளி, மறைந்தார்

 

பெரியபுராணம்:

 

காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணாய நீள்நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம் நாணாது மேடிய மால் நான்முகனும் காண நடுச்சேணாலும் தழல் பிழம்பாய் தோன்றியத தெளிந்தார்

சங்க இலக்கியம் கூறும் கார்த்திகை தீபம்

  1. தேவாரம்
  2. நெடுநல்வாடை
  3. நற்றிணை
  4. அகநானூறு
  5. தேவாரம்
  6. கார் நாற்பது
  7. களவழி நாற்பது
  8. சீவகசிந்தாமணி
  9. நற்றிணை
  10. அகநானூறு
  11. முத்தொள்ளாயிரம்
  12. மதுரைக்காஞ்சி
  13. பட்டினப்பாலை
  14. பரிபாடல்
  15. ஐங்குறுநுாறு

 

திருஞானசம்பந்தர் தேவாரம்:

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பொழிப்புரை :

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

குறிப்புரை :

வளை – வளையல். மறுகு – தெரு. வண்மை – தெருவினர் கொடைவளம். துளக்கு – அசைவு. தளர்வு, வருத்தம். இல் – இல்லாத. இறைவனைக் குறித்தால் வருத்தமில்லாதவன் என்க. கபாலீச்சரத்தைக் குறித்தால் அசைவில்லாத, தளர்வில்லாத என்க. தளத்து – சாந்தினை. கார்த்திகை விளக்கீடு இளமகளிர் கொண்டாடும் திருவிழா. கார்த்திகைத் திருவிளக்கீட்டு விழாவின் தொன்மையைப் பழந்தமிழ் நூல்களிலும் சிவாகம புராணங்களிலும் உணர்க
  • பண்:சீகாமரம்
  • பாடல் எண் :3
  • பாடியவர் :திருஞான சம்பந்தர்
  • தலம்: திருமயிலாப்பூர்

 

நெடுநல்வாடை:

செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத்து
அவ்வித ஒவிழ்பதங் கமழப் பொழுதறிந்து
இரும்புசெந் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் துாஉய்க் கைதொழுது(பாடல் அடி.40 – 42)

ஈர்ந்திரி – நெய்யால் நனைந்த திரி. இரும்பு செய் விளக்கு – தகளி. இதன் வழி அக்கால மக்கள் தெய்வ பக்தியுடன் விளங்கியதை நாம் அறியலாம்

கார் நாற்பது:

நலம் மிகு கார்த்திகை நாட்டவரிட்ட

–பொய்கையார்

களவழி நாற்பது:

கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு போன்றனவே

 

சீவகசிந்தாமணி

குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன

தொல்காப்பியத்தில்

வேலை நோக்கிய விளக்குநிலையும் – வேலினைக் குறித்த விளக்கு நிலையும்.
நோக்குதலாவது , விளக்கு ஏதுவாக வேவின் வெற்றியைக் காட்டுத

  • பாடல் எண் :14
  • பாடியவர் :தொல்காப்பியர்
  • உரை :இளம்பூரணர்

நற்றிணை:

சங்க இலக்கியத்தின் அகத்துறைப் பாடல்களில் நற்றிணை சிறப்பான ஒரு தொகுப்பு. அதில் வரும் 58வது பாடலை முதுகூற்றனார் என்பவர் எழுதியுள்ளார்  அப்பாடலில் தீபத்தைப் பற்றினக் குறிப்பு உள்ளது.

பெருமுது செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறுதோட் கோத்த செவ்வரிப் பறையின்
கண்ணகத்து எழுதிய குரீஇப் போல,
கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ,
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப நுண் பனி அரும்பக்,
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து,
அவல நெஞ்சினம் பெயர, உயர் திரை
நீடுநீர்ப் பனித் துறைச் சேர்ப்பன்  
ஓடுதேர் நுண் நுகம் நுழைந்த மாவே

  • பாடல் எண் :நற்றிணை 58 
  • பாடியவர் :முதுகூற்றனார்
  • திணை:நெய்தற் திணை

 

English version  of Natrinai  poem

May the horses hitched to the chariot
of the lord of the cold shores with tall
waves, suffer beating,
like the sparrows painted on the eyes
of sweet-toned drums hanging on the
shoulders of very wealthy children
wearing gold jewels,
that are hit with drumsticks!

They caused us to return with sad
hearts and exhausted bodies, at this
helpless evening time,
when delicate dew drops fall, drums
and white conch shells of Veerai’s king
Veliyan Thithan are sounded, and when
rows of lamps are lit.

Meanings:  பெரு முது செல்வர் – very rich people, பொன்னுடைப் புதல்வர் – gold jewels wearing sons, சிறு தோள் கோத்த – hung on their small shoulders, செவ்வரி – lovely sounds, பறையின் – of the drums, கண் அகத்து – on their eyes, எழுதிய – drawn, குரீஇப் போல – like the sparrows (குரீஇ – சொல்லிசை அளபெடை), கோல் கொண்டு – with drum sticks, அலைப்ப – to be hit, படீஇயர் – let them suffer (இயர் – வியங்கோள் வினைமுற்று விகுதி, verb ending with a command, இகழ்ச்சிப்பொருளில் வந்தது, used to show ill will), மாதோ – மாது, ஓ – அசை நிலைகள், expletives, வீரை வேண்மான் வெளியன் தித்தன் – Vēlir king Veliyan Thithan of Veerai, முரசு முதல் – with drums and others, கொளீஇய – lit (சொல்லிசை அளபெடை), மாலை விளக்கின் – with the rows of lamps,  வெண்கோடு – white conch shells, இயம்ப – creating sounds, நுண் பனி அரும்ப – as delicate dew drops fall, கையற வந்த பொழுதொடு – at the helpless time, மெய் சோர்ந்து – with tired bodies, with exhausted bodies, அவல நெஞ்சினம் – we are of sad hearts, பெயர – to move, உயர் திரை – tall waves, நீடு நீர் – abundant water, பனித் துறைச் சேர்ப்பன் – the lord of the cold shores, ஓடு தேர் – fast chariot, நுண் நுகம் – fine yoke, நுழைந்த மாவே – the horses that entered the yoke, the horses that got tied to the yoke (ஏ – அசை நிலை, an expletive)

வெளியன் தித்தன்

உறையூர்த் தித்தன் என்று சங்க. நூல்கள் கூறுவது கொண்டு, வேளிர் குலத்தவனான

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

வெளியன் என்பது கொங்கு வேளாள கவுண்டர்கள் குலங்களில்( கோத்திரங்களில்) ஒன்று,தித்தன் என்பது இவன் தந்தை பெயர்.

Tittan’s son Tittan Veliyan is his son Veliyan. At that time, the name of the father is referred to as the Tittan Veliyan .Veliyan is the Gothra (Kootam) name of kongu velala gounder community one of the largest ethnic community in Tamilnadu

அடுபோர் வேளிர் வீரை முன்துறை நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை பெரும்பெயர்க்கு உருகியாங்கு

வீரை என்னும் ஊரில் உப்புக் காய்ச்சும் தொழில் நடைபெற்றது. வேளிர்குடிப் போராளிகள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவ்வூர் அரசன் வெளியன் தித்தன். இவன் உப்பளங்களில் பணியாற்றுவோருக்கு இரவில் உதவும் வகையில் மாலை நேரத்தில் முரசை அகலாகக் கொண்டு விளக்கேற்றி வைத்தான்

வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கு

பாடல் எண் :நற்றிணை 58
பாடியவர் :முதுகூற்றனார்
திணை:நெய்தற் திணை

எம்பெருமான் ஈசனை அக்னி  வழிபடுவதே இதன் அர்த்தமாகும். இதனை உணர்த்தவே கார்த்திகை தீபத்திருநாளில் சொக்கப்பனை கொளுத்துகின்றோம்.

காலவெள்ளத்தில் பல விழாக்களை நாம் இழந்துவிட்டோம் ஆனால் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் எப்படி கொண்டாடப் பட்டதோ அது போல இன்றும் கொண்டாடப்படும் விழா விளக்கீடு !கார்த்திகை தீபத் திருவிழாவன்று எரிக்கப்படும் `சொக்கப்பனை வைபவம்’ மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகை விளக்கீடு விழாவுக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. `பூலோக கற்பக விருட்சம்’ என்று புராணங்கள் பனைமரங்களைப் போற்றுகின்றன.திருக்கார்த்திகை தினத்தன்று பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து கோயிலுக்கு முன்பு வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றிலும் பனை ஓலைகளைப் பிணைத்துக்கட்டி, உயரமான கூம்பு போன்ற அமைப்பை உருவாக்குவார்கள். மாலை வேளையில் இந்தப் பனைக் கூம்புக்கு முன்பு சுவாமி எழுந்தருளுவார். அவருக்குத் தீபாராதனை காட்டி முடித்ததும், சொக்கப்பனை கொளுத்தப்படும். கொழுந்துவிட்டு எரியும், அந்த ஜோதியையே கடவுளாக எண்ணி மக்கள் வழிபடுவார்கள். சுமார் முப்பது அடி உயரத்துக்குக் கூட சொக்கப்பனை செய்து கிராமங்களில் கொளுத்தப்படும்.

நற்றிணை 202-need to update

அகநானூறு

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை

 

நெடுஞ்சுடர் விளக்கம் நோக்கி வந்துநம்(பா.எ.88)

 

குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி -(அகம்.141)

அகம்.185, 11-need to update 

முத்தொள்ளாயிரம்:

குடத்து விளக்கேபோல் கொம்பன்னார் காமம்
புறப்படா பூந்தார் வழுதி — புறப்படின்
ஆபுகும் மாலை அணிமலையில் தீயே போல்
நாடறி கௌவை தரும்

 

மதுரைக்காஞ்சி:

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்(பா.அடி, 691 – 692)

பட்டினப்பாலை:

கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ(பா.அடி, 246 – 248)

பரிபாடல்:

வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்
மாறுசெல் வளியி னவியா விளக்கமும் (பா.எ.8)

“ஆறுசெல் வளியின் அவியா விளக்கமும்”(பா.எ.8)

 

ஐங்குறுநுாறு:

ஒண்சுடர்ப் பாண்டிற் செஞ்சுடர் போல
மனைக்குவிளக் காயினண் மன்ற கனைப்பெயற்(பாடல் எண்.405)

 

திருவல்லா செப்பேடு

விளக்கீடு, விளக்கு என்பன அழகான தமிழ்ச்சொற்கள், காலங்காலமாய் கல்வெட்டுகள் மன்னர்களும் குடிமக்களும் கோவில்களில் விளக்கெரித்த செய்தியை தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளன !

Screenshot_2019-12-10-16-41-20-465.jpeg
திருவல்லா செப்பேடு

பனையோலைக் கொழுக்கட்டை

கார்த்திகையன்று தீபம் ஏற்றுவது, சொக்கப்பனை எரிப்பது எப்படிச் சிறப்பானதோ அதேபோன்று `பனையோலைக் கொழுக்கட்டை பிரசாதமும் சிறப்பானது.  பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து, இந்தக் கலவையைப் பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும். இந்தக் கொழுக்கட்டையின் சுவைக்கு ஈடு, இணை எதுவுமில்லை என்று கூறலாம். கார்த்திகை விளக்கீட்டுத் திருவிழா முடிந்த பிறகும் அதன் சுவை நாவில் நிலைத்திருக்கும்!

பனையோலைக் கொழுக்கட்டை

 

 

 

கார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா? இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ச்லோகத்துக்கு அர்த்தம்.

                                                                     ——தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

 

தீபம் ஏற்றும் முறை

தீபம் ஏற்றும் முறை கார்த்திகை தீபத்தன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றுவது நல்லது. வீட்டு வாசலில் குத்து விளக்கில் தீபம் ஏற்றுவதை சிலர் வழக்கமாக வைத்திருப்பார்கள்.

மண் விளக்கு நூல் திரி சுத்தமான விளக்கெண்ணெயும், நல்லெண்ணெய்யும் எரிந்து வெளிப்படும் வாசனை மனதையும், கிராமத்தையும் நிறைக்கும்.

இந்த நாளில் நைவேத்தியமாக அவல், கடலை நெல்பொரி, அப்பம் இவற்றை இறைவனுக்கு படைப்பார்கள்.

நாம் ஏற்றும் அகல் தீபமானது கிழக்கு திசை நோக்கி ஏற்றி வைத்தால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். வடக்கு திசை நோக்கி ஏற்றும்போது திருமணத்தடை நீங்கும். எந்த காரணத்தை கொண்டும் தெற்குத் திசையை நோக்கி விளக்கு ஏற்ற கூடாது

Continue reading