சித்திரை முதல் தேதி, அதாவது மேஷ ஸங்கராந்தி நாள் முதல் (சூரியன் மேஷ ராசி நட்சத்திர கூட்டத்திற்கு நேராக வரும் மாதம்) அதாவது மேசத்திற்கு (அசுபதி நட்சத்திரம்) நேராக ஏழாம் வீட்டில் 180 டிகிரி எதிர்புறம் உள்ள சித்திரை நட்சத்திர கூட்டத்திற்கு, சந்திரன் நேராக வந்து சஞ்சரிக்கும் மாதம். அதனால் சித்திரை மாதம். இது சந்திரசூரியமான மாதம்.
இந்த மேச சங்கிராந்தியில், பாரத வருஷத்தில் சூடு ஜாஸ்தியாகி பூமத்திய ரேகைக்கு வடக்கு நோக்கி, இந்து மகா சமுத்திரத்தில் காற்று பாரத வருஷத்திற்கு உள்ளே நுழையும். அது முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும். அதுவே புது வருஷம் (வர்ஷம் என்றால் மழை). அதன் பின் பருவமழை ஆரம்பித்து பாரத வர்ஷம் முழுதும் பெய்யும்.
இது கொஞ்சம் கொஞ்சமாக வடகாற்றாக மாறி மார்கழிக்கு பின்பு மழை நின்று பங்குனியில் சுத்தமாக நின்று விடும். அதோடு அவ்வரூசம் முடிந்தது. வெள்ளாமையும் முடியும்.
பங்குனியில் வெயில் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென் காற்று வடக்கே வராது. “இதனாலேயே, பங்குனியில் மழை பெய்தால் பரக்கோலம்” பழமொழியும் கொங்கு நாட்டில் உள்ளது.
ஆக, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல பாரத வருஷத்திற்கே இதுதான் புது வருஷம்.
சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் வேளாளர் பண்டிகை.இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் உழவு என்று அழைப்பார்கள்.பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதலில் துவங்கிவைப்பர் பிறகு கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த அழகிய கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள். கொங்குப் பகுதியில்(ஒரு சில இடங்களை தவிர) அருகிப் போயிருந்தாலும் பண்டைய பாரதத்தின் பிற பகுதிகளிலும்(பாரத வருஷத்தில் தென்கிழக்கு சீன உட்பட கம்போடியா, பிளிப்பன்ஸ், இந்தோனேசியா, பர்மா, இந்தியா, வங்காளம், பாகிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்கும்) இன்று வரை நடைபெறுகிறது.
ஏன் வெளிநாடுகளில் இந்த வைபவம் நடைபெறுகிறது என்று கேள்வி எனக்கு எழுந்தது?? அதற்கான விடையும் கிடைத்தது??
- ஜனகர் பொன்னேர் பூட்டும் பொழுது சீதாதேவி வெளியே வந்தார் சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.
- In Valmiki’s Ramayana and its Tamil version Kamban’s Ramavataram, Sita is said to have been discovered in a furrow in a ploughed field, believed to be Sita, and for that reason is regarded as a daughter of Bhūmi Devi (the goddess earth). She was discovered, adopted and brought up by Janaka, king of Mithila and his wife Sunaina
- சித்திரை 1 சித்திர மேழி வைபவம் அது என்ன சித்திர மேழி வைபவம் முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது சித்திர என்ற சொல் சமஸ்கிருத சொல் சித்திர = மதி, அழகிய அல்லது பொன் என்று பொருள்படும் மேழி = கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும் வைபவம் = திருவிழா என்று பொருள்.
- மழை புதிதாக ஆரம்பித்து புது வெள்ளாமை செய்ய சித்திரையில் சித்திரைமேழி உழவு அல்லது பொன்னேர் உழவு (பொன் + ஏர்) செய்து ராஜாக்கள் பாரத வருஷத்தில் உழவை ஆரம்பித்து வைப்பர். இன்றும் பாரத வர்ஷத்தின் கிழக்கு நாடுகளான கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இவ்வழக்கம் உள்ளது. இன்றும் கொங்கு நாட்டில்(கொல்லிமலை,பொள்ளாச்சி) , சோழதேசம் ஆகியவற்றில் புது மழையை ஒட்டி வேளாளர்கள் /வெள்ளாளர்கள் பொன்னேர் பூட்டுகின்றனர்.
- சித்திரமேழிசபை என்பது சோழராட்சியில் வெள்ளாளர்களின் கூட்டமைப்பு. மேழி என்றால் ஏர். உழவுக்கு பயன்படும் ஏர் தான் இந்த அமைப்பின் சின்னம்.இராஜேந்திரசோழன் காலத்தில் அரசாங்கத்தின் வரிவிகிதம் போன்ற சில நடவடிக்கைகளை எதிர்த்து வேளாளர்கள் ஒன்று திரண்டு “சித்திரமேழி பெரியநாட்டார் சபை” என்ற ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டனர். அவர்களின் சின்னம் தான் சித்திரமேழி அலங்கரிக்கப்பட்ட ஏர்கலப்பை என்று பொருள்.
- அண்ணமார் கதையில் குன்னுடையா கவுண்டர்(எங்கள் முப்பாட்டன் ) பொன்னேர் ஓட்டிய தகவலும் உள்ளது.
- கிபி 17-ஆம் நூற்றாண்டு எழுத்துப் பொறிப்பு கொண்ட சித்திரமேழி
-
இளம்பூரண அடிகள் ‘கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்றார்.
-
வஞ்சி மாநகரத்தில் வாழ்ந்த இளங்கோ அடிகள் பொன்னேரைப் பாடியது பொருத்தமே
- திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் பொ.பி 12-ஆம் நூற்றாண்டு சோழர்கால சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுப்பு!
சங்க இலக்கியத்தில்:
“கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே” (அகநானூறு -01)
மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்தவான்.
பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரிநல்மா மேனி தொலைதல் நோக்கி”(அகநானூறு -229)
“வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து,விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்“(சிலப்-135)
மிகுதியாகக் கொடிப்போல் வளர்ந்த நீண்ட அறுகம் புல்லையும்,குவளை மலர்களையும் ஒன்றாகச் சேர்த்து பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து தொடுத்த மாலையினைச் சூட்டி,போற்றுவோர் வணங்கி நிற்க,நிலத்தையே பிளக்கும் வண்ணம்,ஏரைப் பூட்டி நிற்கும் உழவர் பாடும் ஏர்மங்கலப் பாடலின் ஒலி ஒருபுறம் கேட்கும்.
“கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்துவிளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்” – (சிலப்.10:13:2-5)
“களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்கவளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்றஅளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்”-(திருவிளையாடற்புராணம்)
உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர,அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண் பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.
“பொன் ஏர் மேனி மடந்தையொடுவென்வேல் விடலை முன்னிய சுரனே.– (ஐங்-388)
மாலை வந்தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரா ராயின்
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே-(குறுந். 319)
“அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங்குரல் நொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க் கடிகொண்டார் பெருங்கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு“-(கார் நாற்பது)
வேளாளர்கள் பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது நொச்சித் தழையை மாலையாகச் சூடிக்கொள்வர் என்றார் கண்ணங் கூத்தனார்.
இனி வரும் காலங்களில் மீண்டும் பொன்னேர் வைபவம் துவங்கப்பட்டு,நாட்டு மாட்டை வைத்து வேளாளர்கள் உழவு செய்ய வேண்டும்.
- சார்வாரி வருஷ மேஷ சங்கராந்தி வாழ்த்துக்கள்.🙏