சித்திரை திருநாள்

 

சித்திரை முதல் தேதி, அதாவது மேஷ ஸங்கராந்தி நாள் முதல் (சூரியன் மேஷ ராசி நட்சத்திர கூட்டத்திற்கு நேராக வரும் மாதம்) அதாவது மேசத்திற்கு (அசுபதி நட்சத்திரம்) நேராக ஏழாம் வீட்டில் 180 டிகிரி எதிர்புறம் உள்ள சித்திரை நட்சத்திர கூட்டத்திற்கு, சந்திரன் நேராக வந்து சஞ்சரிக்கும் மாதம். அதனால் சித்திரை மாதம். இது சந்திரசூரியமான மாதம்.

இந்த மேச சங்கிராந்தியில், பாரத வருஷத்தில் சூடு ஜாஸ்தியாகி பூமத்திய ரேகைக்கு வடக்கு நோக்கி, இந்து மகா சமுத்திரத்தில் காற்று பாரத வருஷத்திற்கு உள்ளே நுழையும். அது முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும். அதுவே புது வருஷம் (வர்ஷம் என்றால் மழை). அதன் பின் பருவமழை ஆரம்பித்து பாரத வர்ஷம் முழுதும் பெய்யும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக வடகாற்றாக மாறி மார்கழிக்கு பின்பு மழை நின்று பங்குனியில் சுத்தமாக நின்று விடும். அதோடு அவ்வரூசம் முடிந்தது. வெள்ளாமையும் முடியும்.

பங்குனியில் வெயில் கடுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் தென் காற்று வடக்கே வராது. “இதனாலேயே, பங்குனியில் மழை பெய்தால் பரக்கோலம்” பழமொழியும் கொங்கு நாட்டில் உள்ளது.

ஆக, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல பாரத வருஷத்திற்கே இதுதான் புது வருஷம்.

சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் வேளாளர் பண்டிகை.இந்த நாளில் ஏர் பூட்டுவதை பொன்னேர் உழவு என்று அழைப்பார்கள்.பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதலில் துவங்கிவைப்பர் பிறகு கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த அழகிய கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள்.  கொங்குப் பகுதியில்(ஒரு சில இடங்களை தவிர) அருகிப் போயிருந்தாலும் பண்டைய பாரதத்தின் பிற பகுதிகளிலும்(பாரத வருஷத்தில் தென்கிழக்கு சீன உட்பட கம்போடியா, பிளிப்பன்ஸ், இந்தோனேசியா, பர்மா, இந்தியா, வங்காளம், பாகிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்கும்) இன்று வரை நடைபெறுகிறது.

royal ploughing ceremony

ஏன் வெளிநாடுகளில் இந்த வைபவம் நடைபெறுகிறது என்று கேள்வி எனக்கு எழுந்தது?? அதற்கான விடையும் கிடைத்தது??

  • ஜனகர் பொன்னேர் பூட்டும் பொழுது சீதாதேவி வெளியே வந்தார் சீதை என்ற பேரே ஏர்கலப்பை நிலத்தில் உழுது செல்லும் பாதையை குறிப்பதாகும். ஏர்க்கலப்பையில் பாதையில் கிடைத்த குழந்தை எனவே சீதை என்று பேர் வைத்தார்கள்.
  • In Valmiki’s Ramayana and its Tamil version Kamban’s Ramavataram, Sita is said to have been discovered in a furrow in a ploughed field, believed to be Sita, and for that reason is regarded as a daughter of Bhūmi Devi (the goddess earth). She was discovered, adopted and brought up by Janaka, king of Mithila and his wife Sunaina

 

  • சித்திரை 1 சித்திர மேழி வைபவம் அது என்ன சித்திர மேழி வைபவம் முதலில் சித்திர என்ற சொல் தமிழ் சொல்லே கிடையாது சித்திர என்ற சொல் சமஸ்கிருத சொல் சித்திர = மதி, அழகிய அல்லது பொன் என்று பொருள்படும் மேழி = கலப்பை அல்லது ஏர் என்று பொருள்படும் வைபவம் = திருவிழா என்று பொருள்.
  • மழை புதிதாக ஆரம்பித்து புது வெள்ளாமை செய்ய சித்திரையில் சித்திரைமேழி உழவு அல்லது பொன்னேர் உழவு (பொன் + ஏர்) செய்து ராஜாக்கள் பாரத வருஷத்தில் உழவை ஆரம்பித்து வைப்பர். இன்றும் பாரத வர்ஷத்தின் கிழக்கு நாடுகளான கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இவ்வழக்கம் உள்ளது. இன்றும் கொங்கு நாட்டில்(கொல்லிமலை,பொள்ளாச்சி) , சோழதேசம் ஆகியவற்றில் புது மழையை ஒட்டி வேளாளர்கள் /வெள்ளாளர்கள் பொன்னேர் பூட்டுகின்றனர்.
  • சித்திரமேழிசபை என்பது சோழராட்சியில் வெள்ளாளர்களின் கூட்டமைப்பு. மேழி என்றால் ஏர். உழவுக்கு பயன்படும் ஏர் தான் இந்த அமைப்பின் சின்னம்.இராஜேந்திரசோழன் காலத்தில் அரசாங்கத்தின் வரிவிகிதம் போன்ற சில நடவடிக்கைகளை எதிர்த்து வேளாளர்கள் ஒன்று திரண்டு “சித்திரமேழி பெரியநாட்டார் சபை” என்ற ஒருங்கிணைந்த இயக்கமாக செயல்பட்டனர். அவர்களின் சின்னம் தான் சித்திரமேழி அலங்கரிக்கப்பட்ட ஏர்கலப்பை என்று பொருள்.
  • அண்ணமார் கதையில் குன்னுடையா கவுண்டர்(எங்கள் முப்பாட்டன் ) பொன்னேர் ஓட்டிய தகவலும் உள்ளது.
  • கிபி 17-ஆம் நூற்றாண்டு எழுத்துப் பொறிப்பு கொண்ட சித்திரமேழி
  • இளம்பூரண அடிகள் ‘கொங்கத்து உழவு, வங்கத்து வணிகம்’ என்றார்.
  • வஞ்சி மாநகரத்தில் வாழ்ந்த இளங்கோ அடிகள் பொன்னேரைப் பாடியது பொருத்தமே

  Image

  • திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் பொ.பி 12-ஆம் நூற்றாண்டு சோழர்கால சித்திரமேழி கல்வெட்டு கண்டெடுப்பு!

 

Image

சங்க இலக்கியத்தில்:

 

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புது மலர்த்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்;
மார்பி னஃதே மை இல் நுண்ஞாண்;
நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டுக்,
கையது கணிச்சியொடு மழுவே” (அகநானூறு -01)

மழைக்காலத்தில் புதிதாக பூத்த, தங்கம் போல் ஜொலிக்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்களால் ஆன மாலைகளை அணிந்தவான்.

 

பொன்னேர் பசலை ஊர்தரப், பொறிவரி 
நல்மா மேனி தொலைதல் நோக்கி”(அகநானூறு -229)
பொன்னிறம் போன்ற பசலைகள் மேனியிலே படர்ந்தன. புள்ளிகளாகிய தேமல்களையும் வரிகளையும் உடைய நல்ல சிறந்த மேனியின் வனப்பெல்லாம் தொலைந்து போகின்றன.

 

வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து,விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்“(சிலப்-135)

மிகுதியாகக் கொடிப்போல் வளர்ந்த நீண்ட அறுகம் புல்லையும்,குவளை மலர்களையும் ஒன்றாகச் சேர்த்து பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து தொடுத்த மாலையினைச் சூட்டி,போற்றுவோர் வணங்கி நிற்க,நிலத்தையே பிளக்கும் வண்ணம்,ஏரைப் பூட்டி நிற்கும் உழவர் பாடும் ஏர்மங்கலப் பாடலின் ஒலி ஒருபுறம் கேட்கும்.

 

“கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்” – (சிலப்.10:13:2-5)
சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, “செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க” என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார்.குவளை மலர் வேளாளர்கள் சின்னம்/அடையாளம்
“களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்”-
(திருவிளையாடற்புராணம்)

உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர,அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.

 

பொன் ஏர் மேனி மடந்தையொடு 
வென்வேல் விடலை முன்னிய சுரனே. 
(ஐங்-388)
செறிந்த தொடியையும் பொன் போன்ற அழகிய மேனியையும் உடைய மங்கையுடன்.
மாலை வந்தன்று மாரி மாமழை
பொன்னேர் மேனி நன்னலஞ் சிதைத்தோர்
இன்னும் வாரா ராயின்
என்னாந் தோழிநம் மின்னுயிர் நிலையே-(குறுந். 319)
பொன்னையொத்த எனது மேனியின்  நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும்வாரார் ஆயின்
“அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த
கருங்குரல் நொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க் கடிகொண்டார் பெருங்கெளவை
ஆகின்று, நம் ஊர் அவர்க்கு“-(கார் நாற்பது)

வேளாளர்கள் பொன்னேர் பூட்டும் முதல் உழவின் போது நொச்சித் தழையை மாலையாகச் சூடிக்கொள்வர் என்றார் கண்ணங் கூத்தனார்.

கொங்கு வேளாளர் சித்திரமேழிக்கொடி

இனி வரும் காலங்களில் மீண்டும் பொன்னேர் வைபவம் துவங்கப்பட்டு,நாட்டு மாட்டை வைத்து வேளாளர்கள் உழவு செய்ய வேண்டும்.

  • சார்வாரி வருஷ மேஷ சங்கராந்தி வாழ்த்துக்கள்.🙏

மாட்டுப் பொங்கல்/பட்டிநோம்பி

கொங்கனின் பட்டி நோம்பி ….

காலையில பட்டிக்கு காப்பு கட்டி, ஏர் கலப்பைக்கு காப்புக்கட்டி, கட்டைவண்டி, சவாரி வண்டி கழுவி காப்புக்கட்டி, பட்டியில் கல் அடுப்பு கூட்டி …..
ஆடு, மாடு, நாய் ,கோழி முதற்கொண்டு எல்லாம் கழுவி … மாடு, காளை, ஆட்டுகிடா கொம்புகளுக்கு எண்ணெய் -மஞ்சள் பூசி -பெயிண்ட் அடுச்சு. வயிறு நிறைய பசும் தீவனம் கொடுத்து……
சாயங்காலம் … வீட்டில்,… பட்டியில் பொங்க வைக்க தேவையான அனைத்தையும் “மக்கிரிகளில்”(பெரிய மூங்கில் கூடைகள்) எடுத்து கட்டை வண்டியில் வைத்து ஊருக்குள்ள தலைவாசல் வழியாக காடு போகும் ….
பட்டியில் 7 பொங்கல் வரிசையாக வைத்து.. தெப்பக்குளம் தோண்டி மாட்டு சாணம் இட்டு நீர் நிரப்பி, கரும்பு ,மா, வாழை ,மஞ்சள் கொத்து , பூக்கள் கொண்டு தெப்பக்குளம் அழங்கரித்து.. தெப்பக்குளம் சுற்றிலும் “வெங்கச்சான் கல்” சாமிகள் வைத்து “காது ஓலை”. “கருகமணி “, மடிபுடவை , “இரட்டை மைகோதி”, “மாவிளக்கு”, வைத்து .. வந்தவர் எல்லோரும் தெப்பக்குளத்தில் காசு போட்டு, விமர்சையாக கும்பிட்டு…பச்சரிசி மாவில் செய்த மாவிளக்கை சும்மாடு வைத்து, கன்னி பெண் குழைந்தையின் தலையில் வைத்து ,பட்டி சுற்றி, பாடல்கள் பாடி…

“கைதண்ணி பட்டியாரே கைதண்ணி” “அசனம் பட்டியாரே அசனம்” “வாய் பூசு பட்டியாரே வாய்பூசு”..

பட்டியில் உள்ளோர் எல்லாம் கிழக்கு, மேற்கு ,தெற்கு, வடக்கு, என நான்கு திசைகளிலும் நின்று ..அந்தந்த திசைகளில் ஊர் உலகத்துல உள்ள தெய்வங்களை அழைத்து ,விருத்தங்கள் பாடி, விழுந்து கும்புட்டு ….

பிறகு பட்டி சுற்றி தீவர்த்தி காட்டி கன்னுகுட்டி, காளைகளுக்கு, பொங்கல் பழம் ஊட்டி,ஆட்டுக்கு பொங்கல்ஊட்டி,பிறகு பட்டி காவல் தெய்வம் பட்டி நாய்களுக்கு பொங்கல் கொடுக்கவேண்டும் ..

பின் பொங்கல் பந்தி ….. பொங்கல், பருப்பு, நெய், மொச்சைக்கொட்டை குழம்பு, ரசம், தயிர், அரசாணிக்கா,அவரைக்கா, அப்பளம், பச்சமாவு, வாழைபழம்,கரும்பு… என பண்டங்கள் நீளும்….

பின் காளை அல்லது கன்னுக்குட்டி அழைத்து, தெப்பக்குளம் சுற்றி … வெண்கல தட்டு எடுத்து  “இரட்டை மைகோதியால்” தட்டி .. மாடு மிரட்டி.. எதிரில் பிடித்திருக்கும் .. “முடக்கத்தான்” தலையால் செய்த, தலை கையிறை, மிரண்ட காளை அறுத்து ஓடும்போது… காட்டில் மாடு மேய்ப்பவர், கீழ் விழுந்து, மாட்டின் பாதம் கும்பிட்டு, தேங்காய் பழம் எடுப்பார்..
பின் பொங்கல் வைத்த அடுப்பில், பால் வைத்து பொங்கவிட்டு .. பொங்கலை மீண்டும் கட்டைவண்டி ஏற்றி.. அடுப்பில் எரியும் கொள்ளிகட்டையும் எடுத்துக்கொண்டு பொங்கல் வீடு புறப்படும்…..

“பொங்கல் பொங்கோணும்! வெள்ளாமை வெளையோணும்! பட்டி பெருகோணும்! பால் பொங்கி வழியோனும்!!”

தன் தொழிலுக்கும் தான் உயிரென நேசிக்கும் பசுவிற்கும் விழா எடுப்பவன் கொங்கன் மட்டுமே.

பட்டி நோம்பி பொது பண்டிகை அல்ல,காராளர்களின் குடும்ப விழா.பொங்கல் விவசாயம் செய்யும் பிற சாதிகளுக்கும் சரி, இதர சாதிகளுக்குமான நோம்பி அல்ல. , அவர்களது குடிசாதிகளான பதினெட்டு குடிகளுக்கு மட்டுமே..

“கார் நடக்கும் படி நடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்
சீர் நடக்கும் திருநடக்கும் திருவறத்தின் செயல் நடக்கும்
பார் நடக்கும் படை நடக்கும் பசி நடக்க மாட்டாதே” ‍
                                         – கவிச்சக்ரவர்த்தி கம்பனின் “ஏர் எழுபது”

ஏறுதழுவுதல்:

மகராதிருநாளின் மறுநாள் ஆயர்கள் தங்களின் ஆநிரைகளுக்கு விழா (மாட்டுப்பொங்கல்) எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும், காளைகளுடன் விளையாடியும் (கொல்லேறு தழுவுதல்) விழாவை கொண்டாடினர்.

FB_IMG_1579012126216

FB_IMG_1579012120488.jpg

மாமன் மகளை மணக்கும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது அதே போல தமிழகத்தில் மட்டுமே காணப்படும் ஒரு தெய்வம் நப்பின்னை.இப்படி ஏழு காளைகளையடக்கி நப்பின்னையை மணம் செய்தான் கண்ணன்.

“சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்

ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்

ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்

கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே”–(பிரபந்தம்)

(பொருள்: வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்புபோன்ற மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக, முசுப்பையுடைய, (ஏழு) எருதுகளினுடைய வலியவளைந்த கொம்புகளின் நடுவிலே கூத்தாடி யருளினாய்)

Related image

மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து எருதுவிடும் திருவிழா நடைபெறும். இவ்விழா மதுரை,இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனவும், தமிழ்நாடு வட மாவட்டங்களில் எருதுகட்டு எனவும் வழங்கப்பட்டுத் தொன்றுதொட்டு மக்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற விழாவாக திகழ்கிறது

வடிவாசலும் பெருமாள் கோவிலும்:

இன்று சமத்துவபொங்கல் ஒரு கும்பல் சுற்றிக்கொண்டு இருக்கிறது அவர்களுக்கு நான் வைக்கும் கெலிவ் இது தான் ஜல்லிக்கட்டில் என் மாடு வாடி வாசல் வழியாக வருகிறது.வடைவாசலாமும் மட்டும்க்கும் என்ன ஸ் சம்பந்தம்?

வாடிவாசலில் இருக்கும் வெள்ளை காவிவர்ணம் எதற்கு இருக்கிறது வடைவாசலில் என் நாமம் போட்டு போட்டு இருக்கிறார்கள்?

Related image

Related image

Related image

ஏறுதழுவுதல் பற்றிய சங்க இலக்கியம்

முல்லைக்கலியின் முதல் ஏழுபாடல்கள் சங்க காலத்தில் எப்படி ஏறுதழுவல் நிகழ்வு நடந்தது, அதில் பங்கெடுத்த காளைகள் எந்த நிறத்தில் இருந்தன, ஆண்கள் அணிந்திருந்த பூக்களின் வகை என்ன, அந்த நிகழ்வை பார்க்க கூடி இருந்த பெண்கள் எப்படி இருந்தார்கள்… என்று மிக விரிவாக விவரிக்கின்றது

 

“கொல்லேற்றுக் கோடு அஞ்சு வானை மறுமனையும்
  புல்லாளே ஆய மகள்”–(கலி)

 

கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்- நச்சினார்க்கினியர் உரை.

ஆக இவ்விதிமுறைப்படி நப்பின்னையை மணக்க கண்ணன் ஏறுதழுவவேண்டும். இதன்படி கண்ணன் ஒன்றல்ல, ஏழு ஏறுகளை தழுவி தன் காதலியான நப்பின்னையை மணந்தான்.

 

ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால் திருமாமெய் தீண்டலர் –(கலி-102 : 9-10)

 

“சூட்டுநன் மாலைகள் தூயன வேந்தவிண் ணோர்கள்நன்னீர்

ஆட்டியந் தூபம் தராநிற்க வேயங்குஓர் மாயையினால்

ஈட்டிய வெண்ணை தொடுவுண்ணப் போந்திமி லேற்றுவன்கூன்

கோட்டிடை யாடினை கூத்துஅட லாயர்தம் கொம்பினுக்கே”–(நாலாயிர திவ்ய பிரபந்தம்)

(பொருள்: வலிமையையுடைய இடையரது குலத்திற் பிறந்த பூங்கொம்புபோன்ற மகளான நப்பின்னையை மணஞ்செய்து கொள்வதற்காக, முசுப்பையுடைய, (ஏழு) எருதுகளினுடைய வலியவளைந்த கொம்புகளின் நடுவிலே கூத்தாடி யருளினாய்)

 

“கொலைமலி சிலைசெறி செயிர்அயர் சினம் சிறந்து,
உருத்து எழுந்து ஓடின்று மேல்.எழுந்தது துகள்;ஏற்றனர் மார்பு;
கவிழ்ந்தன மருப்பு;கலங்கினர் பலர்;அவருள்,மலர்மலிபுகழ் எழ,
அலர்மலி மணிபுரை நிமிர் தோள் பிணைஇ
எருத்தோடு இமிலிடைத் தோன்றினன்; தோன்றி,
வருந்தினான் மன்ற அவ் ஏறு”–(கலி)

 

“காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் வேரி மலர்க் கோதை யாள்” “நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் பொற்றொடி மாதராள் தோள்”(சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை)

 

“இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக் கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை”(மலைபடுகடாம்)

 

முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர்பொருள்

 

 

எருது

 

காங்கேயம் காளை

எருதினைக் காளை என்றும் அழைக்கின்றனர். உழவுத் தொழிலுக்கு /மாட்டு வண்டி பெரும்பான்மை காளைகளையே பயன்படுத்தியுள்ளனர். நாட்டு நலத்துக்கும் வளத்துக்கும் மிக அடிப்படையான உழவுத் தொழிலுக்கும் பன்னிறக் காளைகள் பயன்பட்டுள்ளன என்பதை

“பல நிற மணிகோத்தென்னப் பன்னிற ஏறு பூட்டி
அலமுக இரும்பு தேயஆள்வினைக் கருங்கால் மள்ளர்”(திருவிளையாடற் புராணம் -திருநாட்டுச் சிறப்பு )

காளையின்  நிறத்தைக் கொண்டு அதனை கரிய/காரி காளை,  பிள்ளை காளை,மயிலைகாளை, சேவலை காளை, கபிலநிற காளை, புகர்நிறுத்து காளை என அழைத்தனர் என்பதை

“மணிவரை மருங்கின் அருவிபோல
அணிவரம்பு அறுத்தவெண்காற் காரியும்
மீன் பூத்து அவிர்வரும்அந்திவான் விசும்புபோல்
கொலைவன் சூடியகுழவித்திங்கள் போல்
வளையுபு மலிந்த கோடுஅணிசேயும்
பொருமுரண் முன்பின் புகல்ஏறுபல பெய்து”–(முல்லைக்கலி)

 

 

மாட்டுத் தொழுவம்:

காரி, வெள்ளை முதலிய பல நிறங்களில் அமைந்த ஏறுகள் கொம்புசீவப் பெற்று ஏறு தழுவற் களமாகிய தொழுவினுள் செலுத்தப் படுகின்றன

சீறு அரு முன்பினோன்கணிச்சிபோல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுந்தர் –(கலி-101)

 

சீவுதற்கரிய வலியினையுடைய இறைவனுடைய குந்தாலிப் படைப் போல கூறியதாகக் கொம்புகளைச் சீவி, ஏறுகளைச் சேர தொழுவிடத்தே புகுத்தினர்

 

வானுற ஓங்கிய வயங்குஒளிர் பனைக் கொடிப்
பால் நிற வண்ணன் போல்பழி தீர்ந்த வெள்ளையும்
பொருமுரன் மேம்பட்டபொலம் புனை காரியும்
மிக்கு ஒளிர் தாழ்சடைமேவரும் பிறைநுதல்
முக்கணான் உருவே போல்முரண் முகு குராலும்
மாகடல் கலக்குற மாகொன்றமடங்காப் போர்
வேல்வலான் நிறனே போல்வெருவந்த சேயும் 

 

ஏறு தழுவுதல் என்றிருந்த தமிழர் பண்பாட்டை ஜல்லிக்கட்டாக மாற்றியவர்கள் நாயக்கர்கள் . காளைகளின் கழுத்தில் காசுகளைக் கட்டி ஓடவிட்டு அடக்கி அக்காசுகளை அவிழ்த்தெடுப்பதே ஜல்லிக்கட்டின் உள்ளடக்கம்.

 

போகிப் பண்டிகை/காப்புக்கட்டு நோம்பி

போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் .போகம் எனச் சொல்லக்கூடிய இவ்வுலகத்து அனைத்து வளங்களையும் பெறக்கூடிய நாள்.முன்னோர்களுக்கான பூஜை காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது.போகியன்று, கொங்கு பகுதிகளில் வீட்டின் கூரையில் செருகப்படும் ஆவாரம் பூ, பூலாப்பூ,வேப்பிலை இதை காப்புக்கட்டு என்பார்கள்.

காப்புக் கட்டுவதின் முக்கிய நோக்கம் பாதுகாப்பு, ஆரோக்கியம் கிடைக்கும் எனவும், சுத்தம் செய்த வீட்டிற்குள் கெட்டது எதுவும் வராமல் இருப்பதற்காவும் மாவிலை, வேம்பு இலை, ஆவாரம் பூ,பூலாப்பூ(பூளைப்பூ) வைத்து  ஆகியவற்றை சேர்த்து கட்டப்படும்.

 

Image result for பூளைப்பூ
பூளைப்பூ

பூளை அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை கொங்கு வட்டர வழக்கில் பூளாப்பூ என்பர்

வேளாண் பூதம் அணியும் பூக்களில் ஒன்று பூளை பூ

போகத்தை==விளைச்சலை தந்தவன் ,போகி என்றால் இருவரை குறிக்கும்.

  • நாஞ்சில் வலவன்/வாலியோன்/பலராமன்/நாஞ்சிற்பனைக் கொடியோன்
  • இந்திரன்

போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.வைகறையில்(காலைநேரம்) ’நிலைப் பொங்கல்’ நிகழ்வுறும்.

வாலியோன்:

மாயோனும்,வாலியோனும் அன்றைய ம் விவசாய குடிகளின் இரட்டை தெய்வங்கள்

Krishna & Balarama

பலராமனை நம்மில் பெரும்பாலானோர் மகாபாரதத்தின் மூலமே அறிவோம். ஆனால் தமிழ் இலக்கியங்களை படித்தால் நமக்கு தெரியவரும் உண்மை என்னவெனில் பலராமன் தொல்காப்பியத்தில் வணங்கபட்ட “வேளாண்மைக்கடவுள்” என்பதே. தமிழர் பண்டிகை எனப்படும் பொங்கலின் துவக்கத்தில் கொண்டாடப்படும் “போகியின்” தெய்வம் அவனே.

Balarama

மதுபானபிரியனான பலராமனே முன்பு போகி என அழைக்கபட்டதாக பாண்டியர் கல்வெட்டு கூறுகிறது. மதுபானபிரியனான பலராமனை வணங்கி மதுவை படைத்து கொண்டாடப்படும் பொங்கல் மதுப்பொங்கல் என அழைக்கபடும். இன்றைக்கும் பல ஊர்களில் அம்மன் கோயிலில் மதுப்பொங்கல் கொண்டாடபடுவதை காணலாம்.

தமிழகத்தில் உலக்கை தாடியனுக்கு சங்ககாலத்தில் கோவில்கள் பல இருந்தன என்பர் சிலம்பு வாயிலாக அறிகிறோம்.பின்வரும் சிலம்பு பாடல் அதை தெளிவாக விளக்குகிறது.

“பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்
புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்”(சிலப்பதிகாரம்)

பொருள்: 1)அவதாரம் என்ற பெயரில் ஒரு தாயின் வயிற்றிலும் பிறவாத மஹாதேவனாகிய சிவன் கோவிலும், 2)ஆறுமுகன் கோவிலும், 3)வெள்ளை நிற சங்கு போல உடலை உடைய பலதேவன் கோயிலும், 4)நீலமேனி உடைய பெருமாள் கோயிலும், 5)முத்து மாலையும் , வெண்குடையும் உடைய இந்திரன் கோயிலும், 6)சமணர்களின் பள்ளியும், அறச் சாலைகளும், துறவிகள் வாழும் ஒதுக்குப் புறமான இடமும் பூம்புகாரில் இருந்தன.

பலராமன் என சமஸ்கிருதத்தில் அழைக்கப்பட்டாலும் அவனது தமிழ்ப்பெயர் வாலியோன் என்பதே. வாலியோன் என்றால் வெண்ணிறமுள்ளவன் எனப்பொருள். தம்பியான மாயோன் கருநிறத்தவன். அவனோடு ஒப்பிடுகையில் வாலியோன் சற்று வெண்மை நிறத்தவன். மாயோனும், வாலியோனும் அன்றைய விவசாயக் குடிகளின் இரட்டை தெய்வங்கள். இதை நற்றிணை கூறுவது

மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன்வாலியோன் அன்ன வயங்குவெள் அருவி –(நற்றிணை 32)

மாயோன் – கண்ணன், அன்ன- போன்ற, மால்வரைகவாந் மலைப்பக்கம், வாலியோந் பலதேவன் அன்ன- ஒத்த, வயங்குவெள் அருவி- வெண்ணிறமுடைய அருவிஅதாவது கருமலையில் வீழ்கின்ற வெள்ளருவியை பார்த்து “இம்மலை கண்ணனின் கருமை நிறத்தை ஒத்ததாக இருக்கிறது. அதில் விழும் வெண்ணிற அருவி வாலியோனை ஒத்து இருக்கிறது” என இந்த நற்றிணைப்பாடல் கூறுகிறதுபலராமனின் நிறம் வெள்ளை. ஆயுதம் கலப்பை. ஆனால் அவனது கொடி வடநாட்டில் எங்கேயும் காணமுடியாத தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கிடைக்கும் பனைமரக்கொடி.

இதனால் சங்க இலக்கியங்கள் அவனை பனைக்கொடியோன் என அழைத்தன.நாஞ்சில் என்றால் கலப்பை. கலப்பையை ஏந்திய பலதேவனை “நாஞ்சில் வலவன்” எனக்குறிக்கும் வழக்கமும் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.

காண்க

 நாஞ்சில் வலவ னிறம்போலப் பூஞ்சினைச்
செங்கான் மராஅந் தகைந்தன – பைங்கோற்
றொடி பொலி முன்கையாள் தோடுணையா வேண்டி
நெடுவிடைச் சென்றதென் னெஞ்சு–(கார் நாற்பது-19)

நாஞ்சில் வலவன் – கலப்பைப்படை வென்றியை யுடையவனது, நிறம்போல – வெண்ணிறம் போல, பூஞ்சினை-பூங்கொம்பினையும், செங்கால் – செவ்விய தாளினையுமுடைய, மரா அம் – வெண்கடம்புகள், தகைந்தன – மலர்ந்தன; (ஆதலால்) என் நெஞ்சு – என் மனம், பைங்கோல் தொடி-பசுமையாகிய திரண்ட வளைகள், பொலி – விளங்குகின்ற, முன் கையாள் – முன்னங்கையை யுடையாளின், தோள் – தோள்கள், துணையாவேண்டி – எனக்குத் துணையாக வேண்டி, நெடு இடைச் சென்றது – நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது எ-று

 

Related image
நாஞ்சில்வலவன்- Balarama with Plough

 

புஜங்கம புரஸ்ஸர போகி என்னும்பொங் கணை மீய்மிசைப்
பயந்தருதும் புருநாரதர் பனுவனரப் பிசை செவிஉறப்
பூதலமக ளொடுபூமகள் பாதஸ்பர் ஸனைசெய்யக்
கண்படுத்த கார்வண்ணன் றிண்படைமால் ஸ்ரீபூபதி
ஆதிபுருஷன் அமரநாயகன் அழகமைநா பிமண்டலத்துச்–(தளவாய்புரச் செப்பேடு)

மேல குறிப்பிடப்பட்டுள்ள வரிகள்  பலராமனை ‘புஜங்கம புரஸ்ஸர போகி’ எனக் கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பராந்தக வீர நாராயண பாண்டிய மன்னனின் தளவாய்புரச் செப்பேடு குறிப்பிடுகிறது. எனவே,போகிப் பண்டிகை என நாம் குறிப்பிடுவது பலராமனுக்கு உரிய விழாவே!

இந்திரன்:

போகி என்றால் இந்திரனையும் குறிக்கும்.இந்திரனே மழைக்கு அதிபதி.ஐம்பூதங்களுக்கு நிகரான ஐம்பொறிகளின் (பஞ்சேந்திரியங்களின்) தெய்வம்; ஐம்பொறிகளால் நுகரப்படும் போகத்தின் தெய்வம்; போகத்தில் விளையும் படைப்பின் தெய்வம் – என்ற சித்திரம் இந்திரனுக்கே பொருந்தக் கூடியது.

இந்திரா வழிபாட்டின் வீழ்ச்சி:

மாயோன் – வாலியோன் (கண்ணன் – பலராமன்) வழிபாட்டு வளர்ச்சியின் பின்னணியில் நதிநீர்ப் பாசன முயற்சிகள், உழவு மாடுகளைப் பயன்படுத்திக் கலப்பை விவசாயம் மேற்கொள்ளப் பட்டமை – ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும்.விவசாயத் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக மாயோனின் மனைவியராக நிலமகளும் திருமகளும் (பூதேவியும் ஸ்ரீதேவியும்) அங்கீகரிக்கப்படும் நிலை தோன்றிவிட்டது.

“வேந்தன் மேய தீம்புனல் உலகம்”–(தொல்காப்பியம்)

போகி பலராமன் விழாவே இந்திரா விழா சித்திரை மாதம் நடந்தாக சிலப்பதிகாரம் கூறுகிறது

பூம்புகாரில் இந்திர விழாவின்போது

“சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தெனக் காவற் பூதத்துக் கடை கெழு பீடிகை புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும்சொரிந்து”–(சிலப்பதிகாரம் )

இந்திரா விழா சமயத்தில் பொங்கல் வைத்த இந்திரனை வழிபட்டு இருக்கலாம் ஆனால் தை மாதம் வரும் பொங்கல் விழா பலராமன்/உலகை தடியனின் விழா தான்.

 

 

 

சிலப்பதிகாரம்-குடிமக்கள் காப்பியம்

Siragu-silappadhikaaram-3
சிலப்பதிகாரம்

ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது இந்த சிலப்பதிகாரம் இதனை எழுதியவர் இளங்கோவடிகள். சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம் சிலம்பின் மூலம் உருவான படைப்பு என்பதனால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது.இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.

சிலப்பதிகாரத்தின் தலைவன் தலைவி என்றால் அது கோவலனும் கண்ணகி மட்டுமே.

சிலப்பதிகாரம்
கோவலனும் கண்ணகி  கவுந்தி அடிகள்

முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது; அடிகள் நீரே அருளுக (சிலப்பதிகாரம் – பதிகம் : 61-62) என்ற சாத்தனார் கூற்றிற்கு இணங்க இளங்கோ தம் காப்பியப் படைப்பை மூவேந்தர்க்கும் உரியதாகவே படைத்துள்ளார்.

சிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார் (நாக நீள் நகரொடு நாக நாடதனொடு….). காப்பியத்தலைவனை அடுத்த நிலையில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றார் (பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த…)

சிலப்பதிகாரத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் பகுதியாக அடியார்க்கு நல்லாரின் பதிகவுரை நமக்குப் பெருந்துணைபுரிகின்றது.அடியார்க்கு நல்லாரின் உரை சிலம்பு முழுமைக்கும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனினும் பதிகத்திலிருந்து ஊர்சூழ் வரி வரை மட்டும் கிடைக்கின்றது (கானல்வரி நீங்கலாக). மதுரைக் காண்டத்தில் வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படு காதை, கட்டுரை காதை ஆகிய நான்கு காதைகளுக்கும், வஞ்சிக்காண்டம் முழுமைக்கும் அடியார்க்குநல்லாரின் உரை இல்லை.

சிலம்பில் இடம்பெறும் இசைப்பாடல்கள்

சிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்கள் பல உள்ளன .அதுபோல் கானல்வரியில்,ஆற்றுவரி ,கந்துகவரி  உள்ளிட்ட பல வரிப்பாடல்கள் உள்ளன.முல்லைநிலை மக்கள் பாடும் முல்லைப்பண்ணில் அமைந்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் குறிப்பிடத் தக்க பாடல்களாகும். குரவைக்கூத்து ஆடும் பெண்கள் பாடும் பாடல்களைக் குன்றக்குரவையில் காணலாம்.

 

காண்டங்கள்

சிலப்பதிகாரம்  மூன்று பகுதிகளை கொண்டது ,முறையா அவை சோழ பாண்டிய சேர நாடுகளில் நடைபெறுகிறது.

  • புகார்க் காண்டம்
  • மதுரைக் காண்டம்
  • வஞ்சிக் காண்டம்

புகார்க் காண்டம்:

 

Related image
 புகார்க் காண்டம்

இது 10 காதைகளைக் கொண்டது.அவை,

  1. மங்கல வாழ்த்துப் பாடல்
  2. மனையறம் படுத்த காதை.
  3. அரங்கேற்று காதை.
  4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
  5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
  6. கடல் ஆடு காதை.
  7. கானல் வரி
  8. வேனிற்காதை
  9. கனாத் திறம் உரைத்த காதை.
  10. நாடு காண் காதை

 

மதுரைக் காண்டம்:

 

   மதுரைக் காண்டம்

இது 13 காதைகளைக் கொண்டது. அவை,

  1. காடு காண் காதை,
  2. வேட்டுவ வரி,
  3. புறஞ்சேரி இறுத்த காதை,
  4. ஊர் காண் காதை,
  5. அடைக்கலக் காதை,
  6. கொலைக்களக் காதை,
  7. ஆய்ச்சியர் குரவை,
  8. துன்ப மாலை,
  9. ஊர் சூழ் வரி,
  10. வழக்குரை காதை,
  11. வஞ்சின மாலை,
  12. அழற்படுகாதை,
  13. கட்டுரை காதை

 

வஞ்சிக் காண்டம்:

silappathigaram-vanji-kaandam_FrontImage_863
வஞ்சிக் காண்டம்

இது ஏழு காதைகளைக் கொண்டது. அவை,

  1. குன்றக் குரவை
  2. காட்சிக் காதை
  3. கால்கோள் காதை
  4. நீர்ப்படைக் காதை
  5. நடுநற் காதை
  6. வாழ்த்துக் காதை
  7. வரம் தரு காதை

 

சிலப்பதிகாரம்   சம்பந்தமான எனது மற்ற பதிவுகள்:

தகவல் உதவி :

http://silapathikaram.com/blog/?p=7510

http://www.tamilvu.org/library/l3100/html/l3100ind.htm

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram.html

Click to access %E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D).pdf

http://www.storytellingandvideoconferencing.com/18.html

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறிய முருகன் தலம் எது?

இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலனின் தலம் எது?

Siragu-silappadhikaaram-3
சிலப்பதிகாரம்

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். சேரநாட்டை ஆண்ட மன்னன் நெடுஞ்சேரலாதனின் மகன் செங்குட்டுவன். கண்ணகிக்குச் சிலை அமைத்து பிரதிஷ்டை செய்தவன் அவன். அவனது தம்பி இளங்கோ.

கண்ணகியின் காவியத்தை அற்புதமாக சிலப்பதிகாரமாகத் தந்தவர் இளங்கோ அடிகள். அண்ணனே முடி சூட வேண்டும் என்று துரவறம் பூண்ட பெருந்தகை இளங்கோ. சீத்தலைச் சாத்தனாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்பர்.

அந்தக் காப்பியத்தில் குன்றக் குரவையில் செங்கோட்டு வேலரைக் குறித்து அவர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

இளங்கோவடிகளின் காலம் சுமார் 1850 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

அப்படிப்பட்ட இளங்கோவடிகள் போற்றிப் புகழ்ந்த திருச்செங்கோட்டுத் தலம் கொங்குமண்டலத்தில் தான் உள்ளது என்று கொங்குமண்டல சதகம் தனது 61ஆம் பாடலில் பெருமையுடன் கூறுகிறது.

பாடல் இது தான்:-

“உளங்கோ துறாம லொழுகுசெங் குட்டுவற் கோர்துணையாம்

இளங்கோ வடிக ளியற்றிய காப்பியத் தேவமுதங்

கொளுங்கோன் மதுவெனக் கூறுசெங் கோட்டுவேற் குமரனமர்

வளங்கோ னிடாதசெங்கோடு வளர்கொங்கு மண்டலமே”

பாடலின் பொருள் : மனச்சான்றுக்கு வழுவில்லாது நடக்கும் சேரன் செங்குட்டுவனது ஒப்பற்ற தலைவனான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்துள், சொல்லியருளிய செங்கோட்டு வேலன் வீற்றிருந்தருளும் திருச்செங்கோடு என்னும் திருத்தலமும் கொங்குமண்டலம் என்பதாம்.

திருச்செங்கோடு பண்டைக் காலத்திலிருந்தே பெரும் புகழ் பெற்ற தலமாக இருந்து வந்திருப்பதை எண்ணி மகிழ முடிகிறது

செங்கோட்டுவேலவர்
செங்கோட்டுவேலவர்

 

செங்கோட்டு வேலவர் “அழகு மிளிரும்” நின்ற திருவுருவம்

 

தகவல் உதவி :

http://www.tamilvu.org/library/l5730/html/l5730012.htm